இந்த 1 பானம் இருந்தால் முதுகு வலி முதல் இதயம் பிரச்சனை வரை எதுவும் இருக்காது!!

0
92
#image_title
இந்த 1 பானம் இருந்தால் முதுகு வலி முதல் இதயம் பிரச்சனை வரை எதுவும் இருக்காது!!
முதுகு வலி, மூட்டு வலி, இதய நோய், இரத்த கொதிப்பு போன்றவற்றை குணப்படுத்த இந்த பதிவில் சத்தான ஒரு பானத்தை தாயார் செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த பானத்தை தயார் செய்து குடிப்பதால் நம் உடலுக்கு அதிக அளவு கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றது. இதனால் எலும்புகள் பலம் பெறுகின்றது. ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்த உற்பத்தியும் அதிகரிக்கும்.
முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் குறையும். உடல் எடை குறையும். உயர் இரத்த அழுத்தம் சீராகும். இதயத்தில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவி செய்கின்றது. இத்தனை நன்மைகளை தரும் இந்த பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* ராகி மாவு
* ஆப்பிள்
* தாமரை விதைகள்
* பேரிச்சம் பழம்
* பசும்பால்
இந்த பானத்தை தயார் செய்யும் முறை…
ஒரு பவுலை எடுத்து இரண்டு ஸ்பூன் அளவு ராகி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கால் டம்ளர் அளவு தண்ணீர் விட்டு கெட்டி சேராமல் கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள ராகி கரைசலை இதில் சேர்த்து கலந்து விட்டுகொண்டே இருக்க வேண்டும்.
நன்கு கொதித்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி இதை ஆற வைக்க வேண்டும். அடுத்து ஆப்பிள் ஒன்றை எடுத்து உப்பு நீரில் ஊறவைத்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு சட்டியை வைத்து தாமரை விதைகளை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் ஈரப்பதம் மாறி மொறு பொறுவென்று வரும் அளவுக்கு இதை வறுத்தக் கொள்ள வேண்டும். நன்கு வறுத்த பிறகு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். பொடி செய்த ஜாரில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு நான்கு பேரிச்சம் பழங்களை எடுத்து விதைகளை நீக்கி இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக ஏற்கனவே கொதிக்க வைத்து ஆற வைத்த ராகியையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதில் அரை டம்ளர் அளவு காய்ச்சிய பசும்பாலை சேர்த்து இதை அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு டம்ளருக்கு மாற்றி அப்படியே குடிக்கலாம். தேவைப்பட்டால் ஏலக்காய், முந்திரி, பாதாம் இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளலாம். இனிப்புக்காக வேறு எதையும் சேர்க்கத் தேவையில்லை. ஆப்பிள் பேரிச்சம் பழத்தில் இருக்கும் இனிப்பு போதுமானது.
இந்த பானத்தை காலை மதிய வேலைகளில் தயார் செய்து குடிக்கலாம். கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எல்லாரும் இந்த பானத்தை தயார் செய்து குடிக்கலாம். இதனால் இடுப்பு வலி, முதுகு வலி, முழங்கால் வலி, இதயம் சம்பந்தமான பிரச்சனை, இரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
ராகியில் உள்ள பலன்கள்…
ராகியில் மற்ற தானியங்களை விட அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. இந்த கால்சியம் சத்துக்கள் நமது எலும்புகளுக்கு தேவையான ஒன்று. ராகி எப்பொழுதும் நம்மை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. புற்றுநோய் வராமல் பாதுகாக்கவும் செய்கின்றது. இரத்ததில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. கல்லீரலில் எதாவது கெட்ட கொழுப்புகள் இருந்தால் அதை கரைத்து வெளியேற்றி விடும். மேலும் இது நம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
ஆப்பிளின் நன்மைகள்…
ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய விட்டமின் சி சத்துக்கள் உள்ளது. நமக்கு தேவையான 14 சதவீத விட்டமின்கள் இந்த ஆப்பிளை சாப்பிடுவதன் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கின்றது. ஆப்பிள் பழத்தில் இருக்கும் பெக்டின் என்ற கரையக் கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும். ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் எலும்புகளை பாதுகாக்கும்.
தாமரை விதைகளில் இருக்கும் சத்துக்கள்…
இந்த தாமரை விதைகளில் அதிகளவு மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. இது நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகின்றது. இதய நோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க உதவுகின்றது. இந்த தாமரை விதைகளில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்களும் குறைந்த அளவு சோடியம் சத்துக்களும் உள்ளது. இது நம் உடலில் இரத்த அழுத்தத்தை சமநிலைபடுத்தவும் உதவுகின்றநு. மேலும் மனச்சோர்வையும் போக்குகின்றது.
பேரிச்சம் பழத்தின் நன்மைகள்…
இந்த பேரிச்சம் பழம் நம் குடல் நன்கு செயல்பட உதவுகின்றது. தினமும் இரண்டு பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை சரியாகும். பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவி செய்கின்றது. இதில் இருக்கும் பொட்டாசியம் சத்துக்கள் இதயத்தின் செயல்பாட்டை மென்மையாக்குகின்றது.