நாம் அடிக்கடி சாப்பிடும் பருப்பு உணவுகளில் துவரை முக்கிய இடம் பெறுகிறது.பருப்பகளில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் அதை அதிகமாக சாப்பிட்டால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
துவரை,பச்சை பயறு,சுண்டல்,காராமணி போன்ற பருப்புகளில் புரதம்,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை உட்கொண்டால் நமது உடல் தசைகள்,எலும்புகள் வலிமையாக மாறும்.
இந்த பருப்பில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.குறிப்பாக ராஜ்மா பருப்பில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.ராஜ்மா சாப்பிட்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த ராஜ்மா உணவுகளை சாப்பிடலாம்.வயதானவர்கள் தங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த ராஜ்மாவை சாப்பிடலாம்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வர ராஜ்மா சாப்பிடலாம்.உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க ராஜ்மா சாப்பிடலாம்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ராஜ்மா உட்கொள்ளலாம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ராஜ்மா உணவை சாப்பிடலாம்.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க மூட்டு வலி பாதிப்பை சந்திக்காமல் இருக்க ராஜ்மாவில் குழம்பு,பொரியல்,சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.
ராஜ்மாவில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக ராஜ்மா சாப்பிடலாம்.ராஜ்மாவில் இருக்கின்ற அமினோ அமிலங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.