2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!! 

0
31
Gang dragged 2 women naked!! A heart-wrenching incident at the peak of violence!!
Gang dragged 2 women naked!! A heart-wrenching incident at the peak of violence!!

2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!! 

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது. மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

நெஞ்சை உடைக்கும் இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி அரவிந்த் கெஜ்ரிவால் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம் கூடிய விரைவில் அவர்களை கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.

தீவிர விசாரணை செய்யுமாறு போலீசாருக்கு முதல் மந்திரி பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை மந்திரி ஸ்மிரிதி இராணி  தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்மிரிதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில் ”குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது” எனத் தெரிவித்துள்ளார். ”மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது” என தனது ஆதங்கத்தை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.