உங்கள் குடலில் அதிக கழிவுகள் தேங்கியிருந்தால் நிச்சயம் வாயுத் தொல்லை,வயிறு வீக்கம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.எனவே குடல் கழிவுகளை அகற்ற பூண்டில் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பூண்டு பற்கள் – 10
2)சின்ன வெங்காயம் – 10
3)தக்காளி – ஒன்று
4)மிளகு – கால் தேக்கரண்டி
5)புளி – ஒரு எலுமிச்சை அளவு
6)நெல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
7)கடுகு – அரை தேக்கரண்டி
8)வெந்தயம் – கால் தேக்கரண்டி
9)கறிவேப்பிலை – ஒரு கொத்து
10)கொத்தமல்லி தூள் – கால் தேக்கரண்டி
11)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள்.
அதான் பின்னர் அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு வெந்தயம்,கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரியவிடுங்கள்.
அதற்கு அடுத்து மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் நறுக்கிய பூண்டு,வெங்காயம்,தக்காளி பழத்தை அதில் போட்டு நன்றாக வதக்குங்கள்.
பிறகு கொத்தமல்லி தூள்,மஞ்சள் தூள் போட்டு வதக்குங்கள்.பிறகு ஊறவைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.
நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை பூண்டு குழம்பு கொதிக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த பூண்டு குழம்பை சூடான சாதத்துடன் போட்டு சாப்பிட்டால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.