தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

0
115
#image_title

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

நம் முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அல்லது நீங்களே கூட தங்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு பாவச் செயலை செய்திருப்பீர்கள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயலால் பல வித பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்.

பல வித பிரச்சனைகள் நம்மை விடமால் துரத்தி வர காரணம் தெரியாமல் பலரும் அல்லோலப்பட்டு வருகின்றோம். இதற்கு முக்கிய காரணம் செய்த பாவங்கள் தான். நம்மை விடமால் துரத்தும் பாவங்கள் அனைத்தும் அடியோடு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்யவும்.

சனிக்கிழமை அன்று தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதிகாலை நேரத்தில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு வாசலில் சாணத் தண்ணீர் அல்லது வெறும் தண்ணீர் கொண்டு தெளித்து விடவும்.

பிறகு பச்சரிசி மாவில் கோலமிடவும். அதற்கு முன் சூரியனை பார்த்து வணங்கி விட்டு பிறகு கோலமிடவும். இவ்வாறு செய்தால் பாவங்கள் நீங்குமா? ஆம் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
அது சரி நாம் செய்த பாவங்கள் தீர்ந்து விட்டது என்பதை எவ்வாறு அறிவது?

கோலமிட பயன்படுத்திய பச்சரிசி மாவை எறும்புகள் கூட்டம் சாப்பிட வந்தால் நாம் செய்த பாவங்கள் தீர்க்கிறது என்று அர்த்தம். இவ்வாறு தினமும் கோலமிட்டு வந்தால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.