Male Infertility: இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெரும்பாலானோருக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளது. இதனால் கருவறுதலில் தாமதம் என ஏற்பட்டு இல்லற வாழ்வு வரை பாதிப்பை சந்திக்க கூடும். அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் இது ரீதியாக விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கணவர் உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது எனக் கூறுகின்றனர். இதனை எல்லாம் நாம் பாரம்பரிய சித்த வைத்திய முறையில் குணப்படுத்தலாம்.
யாருக்கெல்லாம் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகும்??
பெண்ணின் கர்ப்பப்பைக்கு ஒரே ஒரு விந்தணு அனுப்புவதில் தான் இத்தனை சிரமமும். அந்த வகையில் விந்தணு குறைந்த காணப்படுவது தரம் இல்லாமல் இருப்பது இவை அனைத்திற்கும் வழி வகுக்கும்.
ஒரு சிலருக்கு தொற்று மூலமாக இதன் வீரியம் குறைந்து காணப்படும்.
இரண்டாவதாக வெரிகோஸ் பிரச்சனையாலும் இது பாதிக்கப்படும். அதன் நரம்புகள் விதைப்பையில் விரிவாக்கமடைந்து இந்த உற்பத்தியை குறைய செய்யும்.
அது மட்டுமின்றி சிலருக்கு டிஎன்ஏ ரீதியாகவும் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு விந்து வெளியேறுவதில் சிக்கலை சந்திக்க கூடும்.
இதனோடு நமது உடலில் உண்டாகும் ஆன்டிபாடிகளும் இதற்கு எதிரானவை தான். மேலும் புற்றுநோய் கட்டிகள் ஹார்மோன் பிரச்சனை என இதே போல பல காரணங்கள் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே போகலாம்.
சித்த வைத்திய முறையில் ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை
தூதுவளைக் கீரை
பசலைக்கீரை
அரைக்கீரை
இவை அனைத்தும் காய்ந்தது தனித்தனியே 100 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உளுந்து 100 கிராம்
சிறு பருப்பு 100 கிராம்
கொண்டைக்கடலை 100 கிராம்
பச்சரிசி 1 கிலோ
ஏலக்காய் 5 கிராம்
மிளகு 10 கிராம்
ஆண் மலட்டு தன்மையை நீக்கும் சத்துமாவு செய்யும் முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் காய்ந்து உள்ள கீரைகளை தனித்தனி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது நன்றாக அறைந்ததும் எடுத்து வைத்துள்ள பருப்பு வகைகள் ஏலக்காய் மிளகு உள்ளிட்டவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.
இந்த சத்தமாக இரண்டு டீஸ்பூன் என்று அளவு காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் குடித்து வர ஆண் மலட்டுத் தன்மை நீங்கும்.