கொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம்!! ஒலிம்பிக் கமிட்டி அதிரடி!!

0
97

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி போட்டியிடுபவருக்கு கோரனோ வைரஸ் தொற்று உறுதியானால் எதிராளிக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்படும் என்று ஒலிம்பிக் ஒழுங்குமுறை கமிட்டி தெரிவித்துள்ளது. பாசிடிவ் உறுதியானவர் வெள்ளிப்பதக்கம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரரின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த இறுதிப் போட்டி இதுதவிர தொடக்கத்திலேயே உறுதி செய்யப்பட்டால் அவர் போட்டியிட தகுதி அற்றவராக அறிவிக்கப்படாமல் தொடங்க வில்லை என மார்க் செய்யப்படுவார். முன்னதாக இந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடத்துவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது.

இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹே, ‘ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை டோக்கியோவில் அவசரநிலை கடைபிடிக்கப்படும்’ என அறிவித்திருந்தார்.வைரஸ் தொற்று காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தது. ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என ஓலிம்பிக் கமிட்டி முன்னர் அறிவித்திருந்தது.

பல நாடுகளிலிருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்த மட்டிலும் பல்வேறு விளையாட்டுகளில் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் 2021க்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒலிம்பிக் தொடரில் உலகெங்கிலும் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

அனைவரின் பாதுகாப்பை உறுதிசெய்வது சந்தேகமாக உள்ளது. கொரனோ பரவல் ஏற்படும் அச்சம் நிலவுவதால், ஒலிம்பிக் போன்ற பிரம்மாண்டமான விளையாட்டை தொடர பாதுகாப்பாக நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. ஒலிம்பிக்கை பாதுகாப்பான முறையில் நடத்த முடியும் என ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதிகரித்து வருகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

ஜப்பான் நாட்டு மக்கள் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளன.ர் இதற்கு இடையே தற்போது குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து வருகிறது.

author avatar
Jayachithra