வீடு கட்ட கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மூலப் பொருட்களின் விலை குறைப்பு!!

Photo of author

By Gayathri

வீடு கட்ட கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மூலப் பொருட்களின் விலை குறைப்பு!!

Gayathri

வீடு கட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய எம்சாண்ட் பிசாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உடைய விலை 1000 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய விலை நிலவரப்படி 1000 ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைமைச் செயலகத்தில் நீர்வளம் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் துறைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

 

கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அளித்த மனுவல் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் எம்சாண்ட் பிசாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உடைய விலைகள் 1000 ரூபாய் குறைப்பது மற்றும் சாதாரண கற்களுக்கான சீனியரேஜ் தொகை மெட்ரிக் டன்னுக்கு 33 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையானது ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

  • தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலமாக எம்சாண்ட் டி சாண்ட் மற்றும் ஜல்லிக்கட்டு விலையானது யூனிட்டுக்கு 1000 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், இந்த விலை உயர்வுக்கான எதிர்ப்பை பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் தெரிவித்திருந்தார். மேலும் கட்டுமான பொருட்களினுடைய விலைகள் அதிகமாக உள்ளது என்றும் இதனை விரைவில் குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கட்டுமான பொருட்களினுடைய விலை உயர்வால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படும் என்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு புதிதாக விதிக்கப்பட்ட சிறு கனிம நில வரிவிதிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.