சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

0
209

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சுஜித் வீட்டில் வைக்கப்பட்ட்டிருந்த சுஜித்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர், சுஜித் பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும், அரசு சார்பில் ரூ.10 லட்சமும், சுஜித்தின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் காசோலையை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுஜித் பெற்றோரிடம் இன்று வழங்கினார். மேலும் சுஜித்தின் தாய் கலாராணி பிளஸ் 2 படித்துள்ளதால் அவரது தகுதிக்கு ஏற்ப அரசு பணி கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய திருச்சி கலெக்டர் சிவராசு , சுஜித்தின் தாய் கலாராணிக்கு, அரசு பணி கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். அனேகமாக இன்னும் ஒரிரு நாட்களில் சுஜித்தின் தாய் கலாராணிக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஏற்கனவே சுஜித்தின் குடும்பத்திற்கு திமுக சார்ப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?
Next articleடாக்டர் மன்மோகன் சிங்குக்கு நிதித்துறை சார்ந்த முக்கிய பதவி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here