தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

0
69
Grandson jumps on train after death of grandmother in Thoothukudi district! The people of the area are sad!
Grandson jumps on train after death of grandmother in Thoothukudi district! The people of the area are sad!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள பெரியசாமி நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (25). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று தூத்துக்குடி துறைமுகம் மீளவிட்டான் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டாகி ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பெரியசாமி நகரை சேர்ந்த அஜித்குமார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று அஜித்குமார் பாட்டி அழகம்மாள் இறுதிச் சடங்கிற்கு வந்ததாகவும் அதனை முடித்துவிட்டு மிகுந்த மன உளைச்சலாக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தில் தான் கூறுகின்றனர்.

மேலும் அஜித் குமார் பாட்டி இருந்த தூக்கம் தாங்க முடியாமல் சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணை தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தொடார் விசாரணையில்  ஈடுபட்டுள்ளனர். மேலும் பாட்டி இறந்த தூக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட பேரன்னின்  பாசம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K