மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

0
84
Grievance meeting for disabled people! Announcement made by the Collector!
Grievance meeting for disabled people! Announcement made by the Collector!
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
தேனி மாவட்டம் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 05.08.2022 அன்று நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ,முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் கூறியுள்ளார்.தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி
சங்கங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 05ஆம்
தேதி காலை 10.00 01.00 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் (அ) மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி
அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை
நகல், 4 புகைப்படங்களுடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ
விண்ணப்பித்திட வேண்டும். எனவே, இச்சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெற வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் . க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.