யூடியூப் பார்த்து வாலிபர்கள் செய்த துப்பாக்கி சோதனை! கூண்டுடன் தூக்கிய போலீசார்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதிகளில் போலீசார் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்குகிடமாக இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.
அதனால் போலீசார்கள் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அந்த பையில் துப்பாக்கி ,கத்தி ,முகமூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபரணங்கள் இருந்தது.அதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.அதனையடுத்து அவர்களிடம் திவீர விசாரணை நடத்தப்பட்டது.அவர்களின் பெயர் நவீன் சக்கரவர்த்தி ,சஞ்சய் பிரகாஷ் என்பது தெரியவந்தது.
அதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதன் பிறகு அந்த வழக்கானது என் ஐ ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.அந்த விசாரணையில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தாயார் செய்வதாக கூறினார்கள் ,மேலும் அந்த விசாரணையில் கைதான வாலிபர் தங்கியிருந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினார்கள்.அதனையடுத்து சேலம் சன்னியாசி குண்டு எருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட உள்ளனர்.