திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!!

0
89

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தாக குறிப்பிட்ட இயக்கத்தின் அறக்கட்டளையை பொதுவுடைமை ஆக்குவோம் என்று எச்.ராஜா அதிரடியாக கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து திராவிட தந்தை பெரியாரின் அறக்கட்டளையை பொதுவுடைமையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். அறக்கட்டளை என்பது ஒரு தனி மனிதனுக்கு சொந்தமாக இருக்க கூடாது என்றும், அது பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், பெரியார் பற்றி ரஜினி பேசிய சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு: ஆரம்பத்தில் நாங்கள்தான் செய்தோம் என்று மார்தட்டிக் கொண்ட திகவினர் தற்போது அப்படியே மாற்றி நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களின் மூலம் இந்துக்களின் எழுச்சியை காண முடிகிறது. இந்த எழுச்சியை பார்த்து திக அஞ்சுகிறது என்றும் திராவிடம் பேசுவோர் தொடை நடுங்கிகள் என்றும் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசிய சர்ச்சையான பேச்சுக்கு எதிராக பல்வேறு திராவிட அமைப்புகளின் பெயரில் திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டன. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 15 நாட்களுக்கு முன்னதாகவே சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகிய திராவிட இயக்கத்தினரை, காவல்துறையின் கால அவகாசம் முடியும் முன்பே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து மனுக்கள் வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டன.

author avatar
Jayachandiran