மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும் இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!!

0
31
Happy news for students!! Time given to join these colleges again!!
Happy news for students!! Time given to join these colleges again!!

மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும்  இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு மீண்டும் காலாவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை  2023-24, ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில்  சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடியான மாணாக்கர் சேர்க்கை (Spot Admission)  கல்லூரிகளில் 21.08.2023 அன்று முதல் நடத்தப்பட்டது.

ஆனாலும் சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாகவே உள்ளன. எனவே இதுவரை எந்த பிரிவிலும்  விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 12.09.2023 முதல் 14.09.2023 வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று “TNGASA 2023-UG VACANCY” என்ற தொகுப்பில் காணலாம் என உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் தனது செய்திக்குறிப்பில் தற்போது தெரிவித்துள்ளார்.