மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!!

0
34
Happy news given to central government employees!! Salary going up now!!
Happy news given to central government employees!! Salary going up now!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.

அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு அகலவிலைப்படியில் மேலும் உயர்வு ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த அகலவிலைப்படி உயர்வு என்பது ஏஐசபி என்ற குறியீட்டின் படி நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஜூன் முதல் டிசம்பர் மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.இது குறித்து ஜூலை 31 ம் தேதிக்குள் தவணை வழங்கபடுவது பற்றி நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை பற்றிய முழு அறிவிப்பும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் அகலவிலைப்படி உயர்வு ஏற்பட்டால் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு ஊழியர்களுக்கு 46 சதவீதம் சம்பளம் வழங்கப்படும். அதாவது மத்திய அரசானது ஊழியர்களுக்கு அவர்களது வருமானத்தை விட 8280 ரூபாய் அதிகமாக வழங்கப்படும் என்று கருதப்படுகின்றது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் மத்திய அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஜனவரி மாதம் 2024 ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு வருகின்றது. அகலவிலைப்படி  உயர்ந்து 50 சதவீதத்தை தாண்டினால்  மத்திய அரசு  8 வது ஊதியக்குழுவை அமைத்து இதற்கு தீர்வு கான வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு மத்திய அரசானது மற்றொரு ஊதியக்குழுவை அமைக்க பரிசீலனை செய்ய  வேண்டிய முன் முடிவு தங்களிடம் இல்லை  என்று மத்திய நிதித்துறை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

author avatar
Parthipan K