இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பிப்ரவரி மாதத்தில் ரெப்கோவட்டி விகிதத்தை குறைத்து இருந்த நிலையில் மீண்டும் ஏப்ரல் மாதத்தில் அதே அளவு வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இது தவணை முறையில் வீடு வாகனம் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது.
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரெப்கோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 6.50% ஆக இருந்த ரெப்கோ வட்டி விகிதம் முதலில் 0.25% ஆக குறைக்கப்பட்டது. மேலும் தற்பொழுது அதே அளவு அதாவது 0.25% ஆக குறைக்கப்பட்ட தற்பொழுது ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைந்திருப்பது தவணை முறையில் வாகனம் வீடு மற்றும் தனிநபர் கடன் பெற்றுள்ள அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. காரணம் அவர்கள் கட்டக்கூடிய கடன் தவணைகளின் வட்டியானது மிகப்பெரிய அளவில் குறைந்து எளிமையான முறையில் அசலை செலுத்துவதோடு மிக விரைவிலேயே கடந்தவனைகளானது முடிவடைவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
ஆனால் இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கக்கூடிய பட்டியானது குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் நன்மையை வாரி வழங்கினாலும் மறுபுறம் சேமிப்பு வைத்திருக்கக்கூடியவர்களுக்கு வட்டி விகிதம் குறைவு என்பது அதிர்ச்சியை வழங்குவதாகவே உள்ளது.
மேலும் ரெப்கோ வட்டி விதம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியன் ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம் ஜூன் மாதம் 4 மற்றும் 6 தேதிகளில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன.