ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து

0
1626

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து

 

நீர்முள்ளி :

 

திருமணமான மற்றும் இனிமேல் ஆக போகும் ஒவ்வொரு ஆணின் மனதிலும் உண்டாகும் சந்தேகம் தன் துணையை திருப்தி படுத்த முடியுமா? என்பதே. பலரின் உடலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் நன்றாகவே இருந்தாலும் தேவையில்லை வீடியோக்கள் மற்றும் போலி மருத்துவர்களின் பேட்டிகளை பார்த்து மனதை குழப்பி கொள்கின்றனர்.

 

அந்த மாதிரி இல்லாமல் உண்மையாலுமே உடலில் ஏதாவது குறையிருந்தால் அதையும் இயற்கை வைத்தியம் மூலமாக சரி செய்ய முடியும் என பல சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.இதில் மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதை கூட சில பேட்டிகளில் பார்த்திருக்கிறோம் . ஆனால் அவர்கள் கூறுவது பொய்யல்ல.இயற்கை தந்ததை சரியாக பயன்படுத்தினால் அதுவும் சாத்தியம் தான். ஆம் நீர்முள்ளி மூலிகையின் உதவியுடன் அவர்கள் கூறியது போல மணலை கயிறாக திரிக்க முடியும்.அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை,உஸ்ணத்தை குறைத்து ஆண்களுக்கு விந்துவை கெட்டிப்படுத்தும். இதை பயன்படுத்தும் முறையை பார்ப்போம்.

 

தேவையானவை:

 

கசகசா – 10 கிராம்,

பால் – தேவையான அளவு,

நீர்முள்ளி – 30 கிராம்,

பாதாம்பருப்பு – 10 கிராம்.

 

செய்முறை :

 

மேற்குறிப்பிட்ட நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம் மற்றும் கசகசா 10 கிராம் உள்ளிட்டவைகளை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.பின்னர் இதை பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

 

நீர்முள்ளி வித்து ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் விறைப்பு தன்மை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

குறிப்பாக இவ்வளவு சக்தியுள்ள இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்திலும் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 

இது மட்டுமல்லாமல் மேலும் சில மூலிகைகள் ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனையை தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.அதில் சில உங்களுக்காக.

 

1. ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர் விரைப்புதன்மைக்கு சரியான மருந்தாக பயன்படுகிறது.

2. ஓரிதல்தாமரை ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.

3. பூனைகாலி விந்து ,உயிர் அணுக்கள் அதிகரிக்க பயன்படுகிறது.

4. ஜாதிக்காய் ஆண்குறி பருக்க மற்றும் சரியாக விரைக்க செய்யும் சிறந்த மூலிகையாக பயன்படுகிறது.

5. நீர்முள்ளி விதை மேலே கூறியது போல விந்து கெட்டிபட உதவுகிறது.

6. தண்ணீர்விட்டான் கிழங்கு ஆண்மை பெருக உதவுகிறது.

 

மேலே குறிப்பிட்டுள்ள பவுடர் அனைத்தையும் தேனில் கலந்து கட்டி பதம் வரும் வரை கலக்கி வைத்து கொள்ளுங்கள்.பின்னர் இதை தினமும் காலை மாலை கோலி குண்டு அளவு சாப்பிடவும்.

இந்த மருந்தை சாப்பிட்ட உடனே உங்களுக்கு இதன் பயன் தெரியும்.

Previous articleதேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!
Next articleஇனிமேல் இவர்களுக்கும் இது இலவசமே! அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here