சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர்

0
147

சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர்

சமீப காலங்களில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அளவு கூடிக் கொண்டே வருகிறது.அலோபதி மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை இவர்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும்,உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரு மூலிகை தேநீர் குறித்து இன்று பார்க்கலாம்.

சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான மூலப்பொருட்கள்

1.சிறியா நங்கை இலை – 100g
2.நெல்லி முள்ளி – 100g
3.நாவல் கொட்டை – 100g
4.வெந்தயம் – 100g
5.சிறு குறிஞ்சான் இலை – 100g
6.பண்ணீர் பூ – 200g

செய்முறை விளக்கம்

மேற்கூறிய மூலபொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகள் மற்றும் மூலிகை பண்ணைகளில் கிடைக்கும்.அதை மேற்கூறியவாறு தேவையான அளவு வாங்கி கொள்ளுங்கள்.

தயார் செய்த அனைத்தையும் சுத்தம் செய்து நன்கு சூரிய ஒளியில் காய வைத்து கொள்ளுங்கள்

அதில் வெந்தயம் மட்டும் ஊற வைத்து முளை கட்டிய பிறகு காய வைத்தால் பலன் மேலும் அதிகம்

தற்சமயம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் ,அரைத்த பின் இதை சலிக்க தேவையில்லை

சாப்பிடும் முறை

தினசரி காலை மற்றும் இரவு உணவு முன் இதை 100 மிலி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடிக்கவும். வாய்ப்பிருந்தால் இதை டீ போல கொதிக்க வைத்தும் குடிக்கலாம்

மருத்துவ நன்மைகள்

1.சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
2.பாத எரிச்சல் சரியாகும்
3.உடல் அசதி குறையும்
4.வயிறு சுத்தம் ஆகும்,ரத்தம் அதிகரிக்கும்
5.சிறுநீர் எரிச்சல் சரியாகும்

இந்த சூரணம் அனைத்து வயதினருக்கும் பயன்படும்.

இவ்வாறு இதை ஓரிரு மாதம் இது எடுத்த பிறகு ஏற்கனவே சாப்பிட்டு வரும் ஆங்கில மருந்தை முற்றிலும் நிறுத்தி விடலாம். இதுவே உடலுக்கு போதுமான சக்தியை கொடுக்கும்.