செலவே இல்லாமல் சர்க்கரையை குறைக்கலாம்!

0
163
#image_title

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு மூக்கிரட்டை ஒரு சிறந்த பொருளாக உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம்.

 

மூக்கிரட்டை இலையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது காடுகளில் ஆங்காங்கே இருக்கும். கிராமத்தில் இருப்பவர்கள் அதை அப்படியே பிடுங்கி சாப்பிடலாம். நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் இந்த இலையை அடையாளம் காண முடிந்தால் நீங்கள் பார்க்கலாம் அல்லது நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கூட வாங்கி பயன்படுத்தலாம்.

 

மூக்கிரட்டை கீரையை சாறு பிழிந்து அந்த சாரை குடித்து வரும் பொழுது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை உங்களுக்கு கட்டுக்குள் வரும். இன்சுலின் அளவு உங்களுக்கு கட்டுப்படும். உணவுக்கு முன்பாக 10 மில்லி அளவு மூக்கிரட்டைச் சாறை குடித்து வரும் பொழுது ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறையும்.

 

மூகிரட்டை கீரையை சமைத்து உணவாக சாப்பிடும் பொழுது உங்களது எடையும் அளவுக்கு மேல் ஏறாது.

 

பெண்களுக்கு இருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த மூக்கிரட்டை கீரை சரி செய்கிறது. மூக்கிரட்டை பொடியை 2 கிராம் அளவு அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து குடித்து வரும் பொழுது வெள்ளைப்படுதல் உங்களுக்கு நிற்கும்

.

 

 

 

 

author avatar
Kowsalya