கொடூரக்காரி மூன்று பிள்ளைகளுக்கு எமனாக மாறிய பெற்ற தாய்?.. வெளிவரும் பகீர் சம்பவம்!..
திருவண்ணாமலை மாவட்டம் சாதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய வயது 30. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி அமுதா இவருடைய வயது 27. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. மகன்கள் நிலவரசு 5, குறளரசு 4, மகள் யாஷினி 7 மாத குழந்தை.இதில் நிலவரசு அதே பகுதியில் உள்ளஒரு அரசு அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்திருந்தான்.
இந்நிலையில் அமுதாவின் மூத்த மகன் நிலவரசு நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருந்தான். மதியம் அமுதா திடீரென பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் வீட்டில் விசேஷம் எனக் கூறி அவனை அழைத்துச் சென்றுள்ளார். தாய் தன்னை கொல்ல போகும் விபரீதம் அறியாத அச்சிறுவனும் தாயுடன் சென்றுள்ளான்.
நேற்று மாலை அமுதா தனது மகள்களான நிலவரசு ,குறளரசு, யாஷினி ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு தென்பண்ணை ஆற்றின் கரைக்கு அருகே வந்தார். தொடர்ந்து கனமழையின் காரணமாக அணைகள் அனைத்தும் திறந்து விடப்பட்டதால் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.
அங்கே அமுதா திடீரென தனது மூன்று பிள்ளைகளையும் தன் செயலையால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்துள்ளார்.பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் மூன்று குழந்தைகளும் அமுதாவும் அந்நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை பல மணி நேரம் போராடி கரைக்கு கொண்டு வந்தனர்.
அதில் மூன்று குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. அமுதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அவரை பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிறகு காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் அமுதா குடும்ப தகராறு காரணமாக மூன்று குழந்தைகளுடன் ஆற்றில் குதித்தாரா? அல்லது வறுமையின் காரணமாக ஆற்றில் குதித்தாரா? வேறு ஏதாவது காரணமா? பல கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே மூன்று பிள்ளைகளையும் ஆற்றில் சாவடிக்கும் நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.