வீட்டில் இருந்தபடியே கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற!! விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்!!

Photo of author

By Gayathri

வீட்டில் இருந்தபடியே கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற!! விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்!!

Gayathri

How to convert a joint patta to a private one from home!! Application process and required documents!!

கூட்டு பட்டா என்பது ஒரு நிலம் பல உரிமையாளர்களுக்கு சொந்தமாக இருக்கும் பட்சத்தில் பட்டாவில் அனைவரின் உடைய பெயரும் இடம் பெற்று இருக்கும். இது போன்ற கூட்டு பட்டாக்களில் இருந்து தனிப் பட்டா பெற நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

முதலில் தனிப்பட்ட பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் :-

✓ முந்தைய பட்டா நகல் ✓ தற்போதைய கூட்டு பட்டா
✓ விற்பனைச் சான்று (Sale Deed)
✓ பரிசளிப்பு ஆவணம் (Gift Deed)
✓ பகிர்வு உடன்படிக்கை (Partition Deed)
✓ பத்திர பதிவு நகல் (Registration Document Copy)
✓ நில வரைபடம் (FMB – Field Measurement Book)
✓ நகல் A-Register Extract
✓ நில உரிமை விவரங்களை உறுதி செய்யும் அரசு பதிவேடு
✓ தற்போதைய சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது
✓ ஆதார் அட்டை
✓ ரேஷன் அட்டை
✓ வாக்காளர் அட்டை
✓ உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்

கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற நினைப்பவர்கள் கூட்டு பட்டாவில் இடம் பெற்று இருக்க கூடிய அனைவரின் ஒப்புதலோடும் பெறுதல் அவசியம். இதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றால் மட்டுமே தனி பட்டா பெற முடியும். அதனைத் தொடர்ந்து சரியான நில அளவீடு மிக முக்கியமான ஒன்று.

விண்ணப்பிக்கும் முறை :-

நேரடியாக சென்று விண்ணப்பிக்க நினைப்பவர்கள் அவரவருடைய தாசில்தார் அலுவலகங்களுக்கு நீரல் சென்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால் இ சேவை மையத்தின் உதவியுடன் பட்டா டிரான்ஸ்பர் என்பதை தேர்வு செய்து அதன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்ட ஆவணங்களோடு இணைத்த பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பெறுவதில் நில உரிமைச் சிக்கல் அல்லது மற்ற உரிமையாளர்களின் உடைய ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றால் முதலில் நீதிமன்றத்தை நாடி பிரச்சினைகளை தீர்த்த பின்பு தான் பிரச்சினைகளை தீர்த்த பின்பு தான் தனி பட்டா பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பட்டா விண்ணப்பம் ஆனது நிராகரிப்பு செய்யப்பட்டால் அதற்கான முறையான காரணங்களோடு தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்யலாம்.