வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..?

0
184
#image_title

வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..?

*உங்கள் கால்களில் அடிக்கடி அடிபட்டாலோ, உங்கள் தலை வாசற்படியில் இடித்துக் கொண்டே இருந்தால் வீட்டிற்கு செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.

*செய்வினை வைத்த வீட்டில் பல்லி தங்காது.

*செய்வினை வைக்கப்ட்டிற்கும் வீட்டில் நிம்மதியான தூக்கம் இருக்காது.

*தொடர்ந்து உடல் நலக் கோளாறு, உடல் சோர்வு, தொடர் தோல்வி மட்டுமே ஏற்பட்டால் வீட்டில் செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.

*வீட்டில் உள்ள பொருட்கள் அடிக்கடி விழுந்து உடைந்து கொண்டே இருந்தால் செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.

*உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வைத்தீர்கள் என்றால் காற்று வீசவில்லை என்றாலும் அந்த சுடரானது நின்று எரியாது.

*உண்ணும் உணவு வயிற்றில் தங்காது.

*உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டு இருந்தால் தலைவலி அதிகமாக இருக்கும்.

*வீட்டில் எந்த வித நல்ல காரியமும் நடக்காது.

*குலதெய்வ வழிபாட்டிற்கு பயணம் மேற்கொள்ள முடியாது. கடவுளை வணங்க முடியாது.

செய்வினை நீங்க பரிகாரம்:-

ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு 10 மணிக்கு மேல் வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இது அனைத்தையும் சம அளவு எடுத்துகொள்ள வேண்டும். இதை ஒரு மண் அகல் விளக்கில் ஊற்றி வெள்ளெருக்கன் நாரை திரியாக போட்டு வீட்டின் மைய பகுதியில் விளக்கை கிழக்கு நோக்கி தீபம் ஏற்றி விளக்கு முன்பு மேற்கு நோக்கி கம்பளியில் அமர்ந்து மந்திரத்தை 108 முறை தொடர்ந்து 7 ஞாயிற்றுக் கிழமை சொன்னால் வீட்டில் இருக்கும் செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் விலகிவிடும்.

மந்திரம்:-

“ஓம் அகோர கோர ரூபி
பூதோட பில்லி சூனியம் ஏவல்
சாயச் சாட உறய சுவாஹ”