தாய்ப்பால் சுரப்பை நிறுத்த மல்லிகை பூவை இப்படி பயன்படுத்துங்கள்!! அரை மணி நேரத்தில் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த மல்லிகை பூவை இப்படி பயன்படுத்துங்கள்!! அரை மணி நேரத்தில் பலன் கிடைக்கும்!!

Divya

Updated on:

How to use jasmine flower to stop breast milk secretion!! Get results in half an hour!!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு சிறந்த ஊட்டச்சத்து பானமாகும்.குழந்தைகளுக்கு குறைந்தது இரண்டு வருடங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.ஒருவேளை உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் பால் சுரப்பதை நிறுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

1)தேங்காய் பூ

*அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு கைப்பிடி தேங்காய் பூ போட்டு மிதமான தீயில் வதக்குங்கள்.

*தேங்காய் பூ நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும்.

*பிறகு இந்த தேங்காய் பூவை மார்பின் இரு புறங்களிலும் பூசி காட்டன் துணி வைத்து காட்டினால் பால் சுரப்பு நிற்கும்.

தீர்வு 02:

1)மல்லிகை பூ

*ஒரு கைப்பிடி மல்லிகை பூவை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

*பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

*இந்த பேஸ்டை மார்பகங்களில் பூசினால் சில மணி நேரத்தில் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.

தீர்வு 03:

1)துவரம் பருப்பு
2)பன்னீர்

*50 கிராம் அளவு துவரம் பருப்பை ஒரு கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊறவிடுங்கள்.

*பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு பன்னீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

*இந்த பேஸ்ட்டை மார்பகங்களில் அப்ளை செய்து காட்டன் துணியை கொட்டு கட்டிக் கொள்ளவும்.இப்படி செய்தால் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.

தீர்வு 04:

1)புதினா
2)தேன்
3)தண்ணீர்

*முதலில் 10 புதினா இலைகளை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

*பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

*அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

*இந்த பானத்தில் சிறிது தேன் கலந்து குடித்தால் தாய்ப்பால் சுரப்பது நிற்கும்.

தீர்வு 05:

1)முட்டைகோஸ் இலை

இரண்டு முட்டைகோஸ் இலையை மார்பு மேல் வைத்து கட்டினால் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.