உடனே முந்துங்கள் இன்றே கடைசி நாள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு!

0
245
hurry-today-is-the-last-day-linking-aadhaar-number-with-electricity-connection
hurry-today-is-the-last-day-linking-aadhaar-number-with-electricity-connection

உடனே முந்துங்கள் இன்றே கடைசி நாள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு!

கடந்த ஆண்டு தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது. அந்த மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிவிப்பினை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. மேலும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணி முடிவடைய வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். ஆனால் அந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலானோர் இந்த இணைப்பை மேற்கொள்ளாத காரணத்தினால் மீண்டும் ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி கால அவகாசம் முடிவடையும் நிலையில் 5 சதவீதம் பேர் மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தனர். அதனால் மீண்டும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசமானது வழங்கப்பட்டது. ஆனாலும் ஒரு சிலர் மீதம் இருந்த நிலையில் இம்மாதம் 28ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

அந்த கால அவகாசமானது இன்றுடன் முடிவடைகின்றது. அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை மேற்கொள்ளாத அனைவரும் உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என மின்சார வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K