4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

Photo of author

By Hasini

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

Hasini

Updated on:

Husband's cruel act while having 4 wives! Is he still a human being?

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

பெண் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.மேலும் அவர்களை மிகவும் வலிமையாக வளர்க்க வேண்டும்.எது நடந்தாலும் அவர்கள் தைரியமாக வெளியில் சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி(47) வயதான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவிக்கு, 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர் இறந்து விடவே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ள நிலையில் அவர் இவரைவிட்டு பிரிந்து சென்றதால், மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.அவர்களுக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் 9 வருடங்களுக்கு முன் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக சென்னையில் இருக்கும் போது, ஏற்கனவே திருமணமான ஜீனத் என்ற பெண்ணுடன், இவர் தொடர்பில் இருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவத்தன்று 4 வது மனைவி மற்றும் அனைத்து குழந்தைகளும் உறங்கிக் கொண்டு இருந்தனர்.அப்போது 4 வது மனைவியின் முதல் கணவரின் குழந்தையான 11 வயது பெண் குழந்தையை பாரதி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

நடந்ததை அந்த குழந்தை தன் அம்மாவிடம் கூறியதும், ஜீனத் தாமதிக்காமல் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதியை(47) கைது செய்து போக்சோ சட்டத்தின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.