வாழ்க்கையே வேண்டாம்… கோபத்தில் வீட்டு பொருளை தூக்கி அடித்து நொறுக்கிய ரஜினி – பதறி ஓடப்போன பாலச்சந்தர்!

0
69
#image_title

வாழ்க்கையே வேண்டாம்… கோபத்தில் வீட்டு பொருளை தூக்கி அடித்து நொறுக்கிய ரஜினி – பதறி ஓடப்போன பாலச்சந்தர்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பில் தனக்கென்று வழி வகுத்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தார். இவர் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய ஸ்டைல், நடிப்புத் திறமையைப் பார்த்த இவரது நண்பர்கள் ரஜினியை திரைப்பட கல்லூரியில் சேர்த்தனர். அங்கு ரஜினிகாந்த் நல்ல முறையில் நடிப்பை கற்றார்.

இதன் பின்பு, ஒருமுறை இயக்குநர் பாலச்சந்தர் ரஜினியைப் பார்த்துள்ளார். ரஜினியுடன் நடிப்பும், ஸ்டைலும் பிடித்துப் போக, தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இதனையடுத்து, தொடர்ச்சியாக ரஜினி நடிக்க ஆரம்பித்தார். பட வாய்ப்புகள் ரஜினி வீட்டு கதவை தட்ட ஆரம்பித்தன. கண்டக்டராக சாதாரண வாழ்க்கையை தொடங்கிய ரஜினி வாழ்க்கை மொத்தமாக மாறி இன்று உலகம் அறியும் சிறந்த நடிகராக விண்ணைத் தொட்டுள்ளார் ரஜினிகாந்த்.

தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது, ஜாலியாக வாழ்ந்த ரஜினி, சினிமாவின் புகழ் ஒரு கட்டத்தில் அவருக்கு நெருக்கடியும், மூச்சு மூட்டச் செய்துள்ளது. இதனால், விரும்பிய இடத்திற்கு அவரால் எங்கும் செல்லமுடியாமல் போனதாம். வீட்டிக்குள் குறுகிய வாழ்க்கையால் அவர் ரொம்ப நொறுங்கினாராம். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ரஜினி வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து உடைத்தெறிந்து கத்தினாராம். இதைப் பார்த்த மனைவி லதா அதிர்ச்சி அடைந்தாராம். ரஜினியை அடக்க முடியாமல் தவித்த லதா, உடனே பாலச்சந்தரை போனில் பேசி வீட்டிற்கு அழைத்துள்ளார்.

ரொம்ப பயந்தபடியே பாலச்சந்தரும் ரஜினி வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். அவர் இருந்த ரூமை பார்த்து பாலச்சந்தர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். வீடோ அலங்கோலமாக இருந்த இடத்தில் பாலச்சந்தரின் புகைப்படம் மட்டும் உடையாமல் சுவற்றில் இருந்ததாம்.

வீட்டை பார்த்த பாலச்சந்தர், ரஜினியிடம் இந்த மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிற…. இந்த புகைப்படத்தையும் போட்டு உடைக்க வேண்டியதுதானே என்று கேட்டாராம்.

எங்கையோ சிவாஜி ராவா இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஏன் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தீங்க… என்னால் எங்கையும் சுதந்திரமா போக முடியவில்லை என்று மனக்கஷ்டத்துடன் கூறினாராம்.

அதற்கு பாலச்சந்தர் பட வாய்ப்புக்காக ஒவ்வொருவரும் தேடி, தேடி அலைகிறார்கள். ஆனால், உனக்கே பட வாய்ப்பும், புகழும் உன்னை தேடி வந்தது. அதை சிறந்த முறையில் அனுபவி… என்று ரஜினியை ஆசுவாசப்படுத்தி பாலச்சந்தர் அறிவுரை கூறினாராம்.

author avatar
Gayathri