இந்த தானியத்தை முளைக்கட்டி சூப் செய்து பருகினால்.. ஒரே வாரத்தில் உடல் எடை இறங்கிவிடும்!!

Photo of author

By Divya

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால் உடல் எடை கூடுகிறது.இன்று ஒருசிலர் மட்டுமே ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றனர்.பெரும்பாலானோர் எண்ணெய்,கொழுப்பு உணவுகளை உட்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

உடல் எடை அதிகரிக்க காரணங்கள்:-

**கொலஸ்ட்ரால் உணவுகள்
**சோம்பேறி வாழ்க்கை முறை
**ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்
**ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்
**உடல் நலக் கோளாறு

தேவையான பொருட்கள்:-

1)கேழ்வரகு – இரண்டு தேக்கரண்டி
2)கேரட் – ஒன்று
3)பீன்ஸ் – இரண்டு
4)மிளகு தூள் – கால் தேக்கரண்டி
5)சீர்கத் தூள் – கல் தேக்கரண்டி
6)உப்பு – தேவையான அளவு
7)கொள்ளு பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு கேழ்வரகு எடுத்து கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.பிறகு ஒரு காட்டன் துணியில் இந்த கேழ்வரகை போட்டு முளைக்கட்ட வேண்டும்.

**அதன் பிறகு கேழ்வரகை நன்றாக காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்து ஒரு தேக்கரண்டி கொள்ளு பருப்பை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து கேரட் மற்றும் பீன்ஸை தண்ணீரில் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

**பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் ராகி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து அடுப்பில் சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

**அடுத்து நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் பீன்ஸ் துண்டுகளை அதில் போடவும்.விருப்பப்பட்டால் பட்டாணி,ப்ரோக்கலி போன்ற காய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

**அதன் பிறகு கால் தேக்கரண்டி மிளகுத் தூள்,கால் தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

**பிறகு வறுத்து அரைத்த கொள்ளுப்பொடி சேர்த்து மிதமான தீயில் சூப் தயாரித்து ஒன்றரை மாதம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சரசரவென்று குறைந்துவிடும்.