இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

Photo of author

By Divya

இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

Divya

தவறான உணவுப் பழக்க வழக்கத்தால் இதய ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இளம் வயதில் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட உணவுமுறை பழக்கமே முதன்மை காரணமாக இருக்கிறது.

நாளுக்கு நாள் இளம் வயது மாரடைப்பு பாதிப்பு தலைதூக்கி கொண்டிருக்கிறது.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதய ஆரோக்கியத்தை காக்க பீட்ரூட்,மாதுளை போன்ற காய்களை கொண்டு ஜூஸ் செய்து பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)மாதுளம் பழம் – ஒன்று
3)கருப்பு உப்பு – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மாதுளம் பழத்தை தோல் நீக்கிவிட்டு அதன் விதைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு மிக்சர் ஜார் எடுத்து நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு மாதுளம் பழத்தின் விதைகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த ஜூஸை கிண்ணத்திற்கு வடித்து சிட்டிகை அளவு கருப்பு உப்பு சேர்த்து பருக வேண்டும்.இந்த ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் மாரடைப்பு பாதிப்பு வராமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – ஒன்று
2)உப்பு – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பழுத்த தக்காளி பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மிக்சர் ஜாரில் இந்த தக்காளி துண்டுகளை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தக்காளி பழத்தை மைய்ய அரைத்து ஜூஸாக்கி கொள்ளுங்கள்.

இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி உப்பு கலந்து பருகுங்கள்.இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.