நாள் ஒன்றுக்கு ஒரு இலை என்று மொத்தம் 30 இலைகள் சாப்பிட்டால் போதும் கிட்னி ஸ்டோன் அனைத்தும் கரைந்து விடும்!!

0
259
If you eat a total of 30 leaves that is one leaf per day, all kidney stones will dissolve!!
If you eat a total of 30 leaves that is one leaf per day, all kidney stones will dissolve!!

நாள் ஒன்றுக்கு ஒரு இலை என்று மொத்தம் 30 இலைகள் சாப்பிட்டால் போதும் கிட்னி ஸ்டோன் அனைத்தும் கரைந்து விடும்!!

சிறுநீரகத்தில் அதிகளவு தாதுக்கள் மற்றும் உப்பு படிமங்கள் தேங்கினால் அவை கற்களாக உருவாகி உருவாகி உயிருக்கு உலை வைத்து விடும்.அதிக உடல் எடை,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சிறுநீரகத்தில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிவிட்டால் அவற்றை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதன் பாதிப்பு சற்று தீவிரமடைந்து விட்டால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் சிறுநீரக கல் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி வருவது நல்லது.

1)ரணக்கள்ளி

இந்த மூலிகை சிறுநீரகத்தில் இருக்கின்ற கற்களை கரைக்கும் தன்மை கொண்டது.தினமும் ஒரு ரணக்கள்ளி இலையை அரைத்து கசாயம் போல் செய்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் சில தினங்களில் கரைந்து விடும்.

2)மூக்கிரட்டை

இந்த மூலிகையை வயல் வெளிகளிலும்,தெருவோரங்களிலும் பார்க்க முடியும்.இவை சிறுநீரக கற்களை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.தினமும் 50 மில்லி மூக்கிரட்டை சாறு அருந்தி வந்தால் சிறுநீரக கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

3)சிறுகண்பீளை

சிறுகன்பீளை இலை மற்றும் பூவை இடித்து ஒரு கிளாஸ் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உருவாகி இருக்கும் கற்கள் முழுவதும் கரைந்து விடும்.

4)எலுமிச்சை சாறு

250 மில்லி தண்ணீரில் 50 மில்லி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.