சற்றுமுன்: ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என தொடங்கி மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவது என அடுத்தடுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தியது.
அதில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் மட்டும் தற்பொழுது வரை நடைமுறைக்கு வராததால் பலரும் இது குறித்து பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.
அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்பொழுது பொருளாதார ரீதியாக தமிழக அரசு பல சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் விரைவில் மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் வழங்கும் திட்டமானது நடைமுறைக்கு வரும் என்றும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த திட்டமானது மார்ச் மாதம் மகளிர் தினத்தன்று தொடங்கப்படும் என பல தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசு புதிய மானியம் ஒன்றை வழங்குவதாக கூறியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் யாரேனும் உயிரிழக்கும் வகையில் அவர்களின் வாரிசுகளுக்கு 2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த பணமானது அவர்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் இன்றும் அதுவும் மாற்றுத்திறனாளி இறப்பின் ஈம செலவிற்கு என கூறியுள்ளனர்.
இந்த ரூ 2000 பணத்தை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளின் ஐடி கார்டு அதாவது தேசிய அளவில் வழங்கப்பட்டுள்ள தரவை கொடுத்த பெற்றுக் கொள்ளலாம். அதேபோல இந்த கார்டு இல்லாதவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று இது குறித்து தகவல் அறிந்து பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.