உங்களுக்கு தொடர்ச்சியான வறட்டு இருமல் இருக்கா… அப்போ முட்டை ஒன்று போதும்!!

0
44

உங்களுக்கு தொடர்ச்சியான வறட்டு இருமல் இருக்கா… அப்போ முட்டை ஒன்று போதும்…

 

வறட்டு இருமல் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும். அதிலும் பலருக்கும் தொடர்ச்சியான வறட்டு இருமல் இருக்கும். இந்த வறட்டு இருமலை குணமாக்க இந்த பதிவில் எளிய வைத்திய முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

வறட்டு இருமல் என்பது இருமல் காரணமாக தொண்டையில் புண் ஏற்படும். இந்த புண்கள் காரணமாக இருமல் ஏற்படுவதே வறட்டு இருமல் ஆகும்.

 

இந்த வறட்டு இருமல் சில சமயங்களில் வைரஸ் தொற்று காரணமாக கூட ஏற்படும். சாதாரணமான இருமலை இந்த வறட்டு இருமல் மிகவும் ஆபத்தான ஒன்று. வறட்டு இருமல் பகல் நேரங்களை காட்டிலும் இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும். இந்த வறட்டு இருமல் நம் உடலில் பல தீமைகளை ஏற்படுத்தும்.

 

இந்த வறட்டு இருமலை குணமாக்க நாம் பல மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருப்போம். வறட்டு இருமலுக்கும் சாதாரண இருமலுக்கும் தனித்தனியாக மருந்துகள் குடித்திருப்போம். இவை  தவிர வறட்டு இருமலை குணமாக்க எளிமையான வீட்டு வைத்திய முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

இதற்கான மருந்து தயாரிக்க தேவையான பொருள்கள்…

 

* முட்டை

* வெங்காயம்

* உப்பு

* சித்தரத்தை பொடி

* மஞ்சள் பொடி

* மிளகு பொடி

* மிளகாய் பொடி

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் எடுத்து வைத்துள்ள பொடிகள் அனைத்தையும் அதாவது இந்த முட்டையில் சித்தரத்தை பொடி, மிளகாய் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

பின்னர் அடுப்பூ பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தோசைக் கல்லை வைத்து அதில் இந்த முட்டையை தோசை போல ஊற்ற வேண்டும். இரண்டு புறமும் நன்கு வேக வேண்டும். நன்கு வெந்த பிறகு இதை ஒரு தட்டுக்கு மாற்றி வைத்து அப்படியே சாப்பிடலாம்.

 

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சித்தரத்தை பொடி, மிளகு பொடி இரண்டும் வறட்டு இருமலை குணமாக்கும். மேலும் தொண்டை புண் சரியாகும். மேலும் தொண்டை எரிச்சலும் குணமாகும்.