இந்த இலையில் டீ போட்டு குடித்தால்.. கிட்ட பார்வை தூர பார்வை பிரச்சனை இனி இல்லை!!

0
280
If you make tea from this leaf and drink it.
If you make tea from this leaf and drink it.

இந்த இலையில் டீ போட்டு குடித்தால்.. கிட்ட பார்வை தூர பார்வை பிரச்சனை இனி இல்லை!!

மோசமான உணவு பழக்கம்,சாப்பிடும் உணவில் உணவில் ஊட்டச்சத்து இல்லாமை,நீண்ட நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் கண் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.

இதனால் இளம் வயதில் கண் பார்வையை இழக்க நேரிடுகிறது.எனவே கண் பார்வை தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய இந்த வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)துத்தி இலை
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு ஐந்து துத்தி இலைகளை நீரில் போட்டு கழுவி சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

இந்த பானத்தை குறைவான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பிறகு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பன்னீர் ரோஜா இதழ்
2)ஆட்டு பால்

செய்முறை:-

ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழ்களை சேகரித்துக் கொள்ளவும்.பிறகு இதை நன்கு சுத்தம் செய்து ஒரு சுத்தமான உரலில் போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் 25 மில்லி ஆட்டு பாலை உரலில் ஊற்றி பன்னீர் ரோஜாவை நன்கு இடிக்கவும்.

பிறகு இதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் போட்டு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பூ
2)பசும் பால்
3)பாதாம் பருப்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஐந்து பாதாம் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் அதன் தோலை நீக்கி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் 10 கிராம் வேப்பம்பூ மற்றும் அரைத்த பாதாம் பேஸ்ட் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.