ஆண்கள் விந்து உற்பத்தியை அதிகரிக்க பசும் பாலில் செவ்வாழைப்பழம் போட்டு சாப்பிடுங்கள்.செவ்வாழைப்பழம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவு சுமுகமாக போகும்.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு சோர்வு பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.செவ்வாழைப்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.இந்த செவ்வாழைப்பழத்தை வைத்து விந்து உற்பத்தி அதிகரிக்கும் பானம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)செவ்வாழைப்பழம்
2)பசும் பால்
3)கற்கண்டு
தயாரிக்கும் முறை:-
முதலில் ஒரு செவ்வாழைப்பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு செவ்வாழையின் தோலை நீக்கிவிட்டு பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த செவ்வாழைத் துண்டின் மீது தேன் சிறிதளவு ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி கொதிக்க வையுங்கள்.
பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வையுங்கள்.பிறகு இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.பின்னர் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
வாழைப்பழத்தில் தேன் சேர்த்தால் பனங்கற்கண்டு போட தேவையில்லை.இந்த பாலை தினமும் ஒருமுறை குடித்து வரும் ஆண்களுக்கு தரமான விந்து உற்பத்தியாகும்.நீர்த்த விந்து பிரச்சனை இருப்பவர்கள் இந்த செவ்வாழைப்பழ பால் பருகலாம்.தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகரிக்க செவ்வாழைப்பழ பால் பருகலாம்.