உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!

0
33
If you vote for the Udayasuriyan symbol, Karunanidhi Kudumabad will get light!! Seaman's furious speech at the public meeting!!
If you vote for the Udayasuriyan symbol, Karunanidhi Kudumabad will get light!! Seaman's furious speech at the public meeting!!

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!

 நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி என்னும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் சீமான் பேசியது , உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களித்தல் விடிய போவது உங்கள் வாழ்க்கை அல்ல கருணாநிதி குடும்பத்துக்கு தான் வெளிச்சம் என்று கூறினார்.

மேலும் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களிடம்தான் உள்ளது ஆகவே என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தெலுங்கான முதல்வர் தங்கள் மாநிலத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத்தான் 100 சதவீத இடம் என்ற சட்டம் இயற்றப்பட்டது போல நானும் அந்த சட்டத்தை தமிழகத்தில் இயற்றுவேன்.

அதனை தொடர்ந்து அவர் கூறுகையில் இஸ்லாமியர்களின் வாக்குகள் வேண்டாம் என்று சொல்லிய பாஜக அரசு அவர்கள் தரும் வரியையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே இதை மட்டும் அவர்காளால் சொல்ல முடியாது .இப்பொழுதுகூட மணிப்பூரில் நடந்த கலவரத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியாவில்லை .எப்படி இதை எல்லாம் மத்திய அரசு தடுக்கும் அதெல்லாம் தடுக்காது என்னென்றால் இந்த கலவரத்தை தூண்டுவதே மத்திய அரசு தானே  என்று கூறினார்.

மேலும் இஸ்லாமியர்கள் ,கிறிஸ்துவர்கள் ,தாழ்த்தப்பட்டவர்கள் ,தமிழர்கள் போன்றவர்களை மத்திய அரசானது இனப்படுகொலை செய்து வருகின்றது. எனவே மக்களே நாம் எப்படி பட்ட ஆட்சியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

அதன் பின்னர் நான் முதல்வர் ஆனால் தமிழக மீனவர்கள் தாக்குதலில் தமிழக மீனவர்களிடம் வெடிகுண்டை ஆயுதமாக கொடுத்து விடுவேன் என்றார்.

author avatar
Parthipan K