இதை ஐந்து முறை சாப்பிட்டால் போதும் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

0
250
#image_title

இதை ஐந்து முறை சாப்பிட்டால் போதும் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

 

குழந்தை இல்லாததால் பல தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி பலவிதமான மருந்து மாத்திரைகளையும் சிகிச்சைகளையும் எடுத்தும் பலன் இல்லாமல் கவலைப்பட்டு வருபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அந்த கவலையை போக்க இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு சாப்பிடுவது என்று தெரிந்து கொள்வோம்.

 

குழந்தை இன்மையை போக்கும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* பூண்டு

* மிளகு

* இலந்தை இலை

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

ஒரு கைப்பிடி அளவு இலந்தை கொழுந்து இலை, 4 பூண்டு பற்கள், மிளகு 7 இவை மூன்றையும் ஒன்றாக வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த இந்த கலவையை இளநீருடன் சாப்பிடலாம். அவ்வாறு இல்லையென்றால் சாதாரண தண்ணீருடன் சேர்த்து சாப்பிடலாம்.

 

இவ்வாறு சாப்பிடுவதால் பெண்களுக்கு உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். இதனால் கர்ப்பப்பை வளர்ச்சி அடையும். இந்த மருந்தை பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட இரண்டாவது நாள் காலை 5 மணிக்கு சாப்பிடலாம். அவ்வாறு இல்லையென்றால் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அதாவது வெறும் வயிற்றில் கலை உணவு உண்பதற்கு முன்னர் சாப்பிட வேண்டும்.

 

இந்த மருந்தை சாப்பிடுபவர்கள் எண்ணெயில் தயார் செய்த உணவுகளை சாப்பிடக் கூடாது. அது போல ரொட்டி போன்ற உணவுகளையும் எடுக்கக் கூடாது.

 

இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் பெண்கள் கேழ்வரகில் உணவு தயார் செய்து சாப்பிடலாம். இதனால் கர்ப்பப்பை வுகமாக வளர்ச்சி பெறும். அது போல கருமுட்டை வேகமாக வளர்ச்சி அடையும்.

 

பச்சரிசி தொடர்பான உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது. அது போல சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நாட்டுக் கோழி முட்டைகள் கிடைத்தால் சாப்பிடலாம்.

 

கருமுட்டை வளர்ச்சி இல்லாத பெண்கள், கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாதவர்கள் நாட்டுக் கோழி முட்டை, விளக்கெண்ணெய் 50 மிலி, ஒரு பச்சை வாழைப்பழம் மூன்றையும் ஒரு டம்ளரில் போட்டு கலந்து மாதவிடாய் ஏற்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கர்ப்பப்பை வளர்ச்சியடையும். மேலும் கரு முட்டையின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

 

அது போல திருமணமான தம்பதிகள் குழந்தை வரம் வேண்டும் என்றால் அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ளவேண்டும். அதிகாலை நேரத்தில் வயிறு காலியாக இருக்கும். மேலும் பெண்களுக்கு கர்பப்பை காலியாக இருக்கும். மேலும் அதிகாலை நேரம் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் தம்பதிகள் உடலுறவு கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும்.