மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

0
193
#image_title

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கடந்த மே 8 ஆம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டது. இதனால் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவுகள்  இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல்  விண்ணப்பிக்கலாம். 

அடுத்து மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாகவும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் பகுதி நேர படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.