டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு! 

0
191
#image_title

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு! 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதத்தை டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளிவரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு துறைக்கும் குரூப் தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் பணி நியமனம் செய்யப்படுவர். இதற்கான தேர்வுகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்பட இருக்கிறது. அதேபோல் குரூப் -7பி மற்றும் குரூப்-8 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளும் இந்த மாதம் வெளியிடப்பட உள்ளது.

இதே போல் 5446 காலியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்ற நபர்கள் மெயின் தேர்வை எழுதி முடித்துள்ளனர். இந்தத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதம் வெளிவரும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.