குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த இணையத்திற்கு சென்று உடனே இதனை செய்யுங்கள்!

குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த இணையத்திற்கு சென்று உடனே இதனை செய்யுங்கள்!

இரண்டு வருட காலமாக கொரோனா தொற்று அதிக அளவில் காணப்பட்டதால் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதனையடுத்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினாலும் தேர்வுகள் நடைபெறாமல் போனது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தான் அனைத்து அரசு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

குரூப் 2 தேர்வானது மே மாதம் நடந்து முடிந்தது. அதனையடுத்து தற்பொழுது குரூப்-4 தேர்வு வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். காலியிடங்களோ ஏழாயிரம் மட்டும்தான் உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பெற்றுக் கொள்ளலாம் என தேர்வாணையம் கூறியுள்ளது.www.tnpsc.gov.in என்ற இணையத்தில் OTR கணக்கு எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பு மாதிரி தேர்வுகளும் நடைபெற உள்ளது.

Leave a Comment