மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

0
45

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!! 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ் பொது மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.

அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் வருகிற 31-ஆம் தேதி வரை 7 நாட்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் முதலாவதாக  பொதுப்பிரிவினருக்கு இன்று முதல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முதலில் தரவரிசை பட்டியலில் 25,856 இடங்களை பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அடுத்ததாக தற்போது நடைபெறும் இந்த கலந்தாய்வின்  முடிவுகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி  வெளியிடப்படும். மேலும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 27ஆம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.