பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!! 

0
73

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!! 

நாளை முக்கிய வழித்தடத்தில் ரயில் சேவை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

ஈரோடு ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட உள்ளது. நாளை திங்கட்கிழமை  ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை இடையே உள்ள தண்டவாளத்தில் நடைபெற உள்ளது. இதனால் ரயில் எண் 06 412 ( ஈரோடு ஜோலார்பேட்டை ரயில்) என்ற ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. இது காலை 6:25 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 12:10க்கு ஜோலார்பேட்டை சென்றடையும். இந்த ரயில் நாளை முழுவதுமே ரத்து செய்யப்பட உள்ளது.

அதேபோல் மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரும் ரயில் எண் – 06411 என்ற ரயிலும் நாளை முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயிலானது ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு இரவு 7:45 மணிக்கு ஈரோட்டை சென்றடையும். எனவே பயணிகள் அதற்கு ஏற்றார் போல் நாளை ஒரு நாள் மட்டும் மாற்று ஏற்பாட்டினை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.