ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

0
76

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களும் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பெயரை சொல்லி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் அதிமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பலரிடம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் பலரிடம் அதிமுக கவுன்சிலர் என்று கூறி வந்த அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அவர்களிடம் கூறி வேலை வாங்கி தருவதாக பல நபர்களிடம் 59 லட்சம் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். இது பற்றி 15க்கும் மேற்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில் அடையாறு போலீசார் தீவிர விசாரணை செய்து ஏமாற்று வேலை செய்த திலகவேணியை கைது செய்தனர்.

இவர் மேலும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே அது பற்றி அடையாறு போலீசார் கைது செய்யப்பட்ட திலக வேணியிடம் தீவிர தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் யார் யாரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும்.

அதிமுக தலைவர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.