தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

0
80
In Thanjavur district, the sickle was cut at the place where he went to pray! People in the area in fear!
In Thanjavur district, the sickle was cut at the place where he went to pray! People in the area in fear!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

மாவட்டத்தில் ஆலத்தூர் வீரனார் கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பூஜை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள மக்களூர் பகுதியில் இருந்து குழு உறுப்பினர் தங்களுடைய வேண்டுதலை செலுத்துவதற்காக லோடு வேனில் ஆலத்தூர் வீரனார் கோவிலுக்கு வந்துள்ளனர்.

மேலும் அந்தக் கோவிலில் வேண்டுதலை செலுத்தி கொண்டிருக்கும் பொழுது ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கைகளப்பாக மாறியது. அந்த வாக்குவாதமானது பெரியதாக  மாறியது.

மேலும்  ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் இரு தரப்பரப்பையும் சமாதானம் செய்தனர். அதன் பிறகு மங்களூர் பகுதியில் இருந்து வந்தவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு டெம்போ ட்ராவலர் வானில் மாலை நேரத்தில் புறப்பட்டு சென்றனர். அப்போது காலையில் தகராறு செய்த ஆலத்தூர் அண்ணாநகரை சேர்ந்த ராஜதுரை தேவேந்திரன் ஆகியோருக்கும் வேண்டுதலை நிறைவேற்ற வந்த மங்களூர் காரர்களுக்கும் இடையே மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிலையில் உள்ளுறை சேர்ந்த ராஜதுரை தேவேந்திரன் மற்றும் அவர்களுடன் சேர்ந்த சில நண்பர்கள் தங்கள் வைத்திருந்த அருவாளால் மங்களூரில் இருந்து வந்த வீரமணி கார்த்தி கோபி சேரன் சரவணகுமார் ஆகிய ஐந்து பேரையும் சரமாரியாக வெட்டினார்கள். தாக்குதலில் வெளியூர்க்காரர்களுக்கு கைகால் தலை, முதுகுள்ளிட்ட பல இடங்களில் வெட்டு காயம் பட்டது.

மேலும் மயங்கி விழுந்து அவர்களை அப்படியே போட்டுவிட்டு தாக்கிய நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பெயரில் வெட்டுப்பட்ட ஐந்து நபர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்  வெட்டிவிட்டு தப்பி சென்ற  ஆலத்தூர் சேர்ந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சையில் இருந்த கார்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனால் முழுவதும் பரபரப்பானது.

author avatar
Parthipan K