வருமான வரி செலுத்தியாவருக்கு  எச்சரிக்கை போலியான குறுஞ்செய்தி!! யாரும் நம்ப வேண்டாம் வருமான வரித்துறை!!

0
40
Income Tax Payer Warning Fake SMS!! Don't trust the income tax department!!
Income Tax Payer Warning Fake SMS!! Don't trust the income tax department!!

வருமான வரி செலுத்தியவருக்கு  எச்சரிக்கை போலியான குறுஞ்செய்தி!! யாரும் நம்ப வேண்டாம் வருமான வரித்துறை!!

இந்த  நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று  அறிவித்திருந்து.  இந்த நிலையில் மாத இறுதிகுள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

கடந்த ஆண்டுகள்  போல வருவன வரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் 5000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்து.

இந்த நிலையில் வருமானம் வரி செலுத்தபவர்களுக்கு  ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் வருவம் 5 லட்சம் ருபைய்க்கு 1000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவித்திருந்தது. மேலும் வருமான வரி செலுத்தாமல் இருந்தால் அந்த நபர் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

அதனை தொடர்ந்தும் நோட்டீஸ் வந்தும் வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.  மேலும் அந்த நபருக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் இதுவரை  6.77 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல செய்துள்ளர்கள். மேலும் இதில் முதல் முறையாக 53.67 லட்சம் பேர் முதல் முறையாக வருமான வரி தாக்கல் செய்துள்ளர்கள்.  இதனை தொடர்ந்து முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 16.1 % சதவீதம் அதிகமாகும். மேலும் வருமான வரித்துறை வரலாற்றின் முதல் முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வரி செலுத்தியவர்களில் சிலருக்கு ரீபன்ட் தொகை 15.490 வரவு வைக்கப்பட்டு உள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. மேலும் மத்திய அரசின் PIBFfactcheck, என்ற செய்தி அனுப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு வருவமான வரித்துறை இது போன்ற செய்திகளை அனுப்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

 

author avatar
Jeevitha