ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் அபார பேட்டிங்… எளிதாக இலக்க்கை அடைந்த இந்தியா!

Photo of author

By Vinoth

ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் அபார பேட்டிங்… எளிதாக இலக்க்கை அடைந்த இந்தியா!

Vinoth

ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் அபார பேட்டிங்… எளிதாக இலக்க்கை அடைந்த இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியை இந்திய அணி வென்றுள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார்.

முதலில் நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹெண்ட்ரிக் கிளாசன் மற்றும் எய்டம் மார்க்ரம் ஆகியோர் சிறப்பாக விளையாடி முறையே 74 மற்றும் 79 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இஷான் கிஷான் 93 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 113 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 46 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.