அசைக்க முடியாத நிலையில் இந்தியா
உலக அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் வரவேற்பை அதிகரிக்க உலக கோப்பை போல் உலக டெஸ்ட் தொடரை நடத்த ஐசிசி முடிவு செய்தது அதன் படி ஒரு அணி உள்ளுறிலூம் மற்றும் வெளி நாடுகளிலும் டெஸ்ட் தொடரை ஆட வேண்டும் ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் வழங்கப்படும் எடுத்துகாட்டாக 5 டெஸ்ட் கொண்ட தொடர் என்றால் ஒரு டெஸ்ட் க்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் அது போல இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்றால் போட்டிக்கு 60 புள்ளிகள் வழங்கப்படும். ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இருந்து கணக்கு கொள்ளபடும்.

அதன்படி ஆஷஸ் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் ஒரு போட்டியில் வென்றால் 24 புள்ளிகள். அந்தவகையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் இரு அணிகளும் 24 புள்ளிகளை பெற்றன. ஒரு போட்டி டிரா ஆனதால் இரு அணிகளுக்கும் தலா 12 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும் இங்கிலாந்து அணி ஆறாம் இடத்திலும் உள்ளன.

இந்தியா இது வரை மூன்று டெஸ்ட் தொடரில் ஒன்றில் கூட தோல்வி பெறவில்லை இதனால் இந்தியா 360 புள்ளிகளுடன் அசைக்கமுடியாத இடத்தில் உள்ளது அடுத்த இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 116 புள்ளிகள் மட்டுமே பெற்று உள்ளது.எனவே வரும் தொடர்களில் இந்தியா அபார வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பையும்,வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.