தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி… வெற்றி பெறுமா இந்தியா?

0
63

தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி… வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார்.

டி 20 உலகக்கோப்பைக்காக சீனியர் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் ஷிகார் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர். அதே போல பந்துவீச்சிலும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்துள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் இந்தியாவும், மற்றொன்றில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து தொடரின் முடிவை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால் போட்டியை வெல்ல இரு அணிகளுமே பலப்பரீட்சை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.