கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது – ஓ.பன்னீர் செல்வம்!

0
94
#image_title

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது, எந்தச் சூழலிலும், யாராலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

திருச்சி மாநாடு தமிழ்நாடு முழுவதும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது; அடுத்த கட்ட மண்டல மாநாடு குறித்தும் , மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் இன்று ஆலோசிக்க உள்ளதாக என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் , கு.ப.கிருஷ்ணன் , மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் இணைந்து வழங்கினார் .

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் நடைபெற்ற மாநாடு தொண்டர்களின் எழுச்சி மாநாடாக அமைந்த்து, திருச்சி மாநாடு தமிழகம் முழுவதும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் , மண்டல வாரியாக மாநாடு நடத்துவது குறித்தும் இன்று ஆலோசிக்க உள்ளோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நிலையிலும் , எந்த சூழலிலும் யாராலும் அவமதிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது , கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடுமையான கண்டனத்திற்குரியது.

12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதா குறித்து சட்டமன்றத்தில் நான் பேசும்போது தொழிற்சாலைகளின் வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கின்ற சூழலில் , தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் 12 மணி நேரம் வேலை மசோதா இருக்க வேண்டும் என்பதால் அதை சிறப்பு குழுவிற்கு அனுப்பி ஆராய வேண்டும் என சொல்லி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
Savitha