“பி.பி.எஃப்-இல் முதலீடு: மாதம் ₹91,000 வரை ஓய்வூதியம் பெறலாம்! எப்படி?”

Photo of author

By Gayathri

மக்களின் நீண்டகால நிதி பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பி.பி.எஃப் (Public Provident Fund) திட்டம், மிகவும் லாபகரமான முதலீட்டு திட்டமாக மாறியுள்ளது. மிகச்சிறந்த வட்டி விகிதம் மற்றும் வரிவிலக்கு போன்ற பலன்களுடன், இந்தத் திட்டம் உங்களை மாதம் ₹91,000 வரை ஓய்வூதியத்தை பெற வழிவகுக்கும். எப்படி என்று பார்க்கலாம்!

பி.பி.எஃப் திட்டத்தை எந்த இந்திய குடிமகனும் இந்திய அஞ்சலகங்களில் தொடங்கலாம்.

வட்டி விகிதம்: 7.1%

குறைந்தபட்ச முதலீடு: ₹500

அதிகபட்ச முதலீடு: ₹1.5 லட்சம்/வருடம்

லாக்-இன் காலம்: 15 ஆண்டுகள்

இந்த வட்டி விகிதத்தை இந்திய நிதியமைச்சகம் மூன்றுமாதத்திற்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறது.

15 ஆண்டுகள் முடிந்ததும் முழு தொகையைத் திரும்பப் பெறலாம்.

அல்லது, 5 ஆண்டுகள் கூடுதலாக நீட்டிக்க முடியும். இந்த நீட்டிப்பில் முதலீடு செய்யாதிருந்தாலும், கணக்கில் ஏற்கனவே இருக்கும் தொகைக்கு வட்டி கிடைக்கும்.

பி.பி.எஃப்-இல் முழு பலனைப் பெற, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் 5 வரை ₹1,50,000 முதலீடு செய்ய வேண்டும். இதனால் முழு நிதியாண்டுக்கான வட்டி உங்களுக்கு கணக்கிடப்படும்.

15 ஆண்டுகளில்:

முதலீடு தொகை: ₹22,50,000

வட்டி: ₹18,18,209

முதிர்வுத் தொகை: ₹40,68,209

5 ஆண்டுகள் நீட்டித்து, தொடர்ந்து ₹1,50,000 முதலீடு செய்தால்:

மொத்த காலம்: 20 ஆண்டுகள்

முதலீடு தொகை: ₹30,00,000

வட்டி: ₹36,58,288

முதிர்வுத் தொகை: ₹66,58,288

அதனை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால்:

மொத்த காலம்: 25 ஆண்டுகள்

முதலீடு தொகை: ₹37,50,000

வட்டி: ₹65,58,015

முதிர்வுத் தொகை: ₹1,03,08,015

 

30 ஆண்டுகளுக்குப் பிறகு மாத ஓய்வூதியம் ரூ.91,000!

 

பி.பி.எஃப் கணக்கை 30 ஆண்டுகளாக நீட்டி, ஒவ்வொரு ஆண்டும் ₹1,50,000 முதலீடு செய்தால்:

முதலீடு தொகை: ₹45,00,000

வட்டி: ₹1,09,50,911

முதிர்வுத் தொகை: ₹1,54,50,911

இப்போது, வாராந்திர வட்டி: ₹10,97,014

அதனால், மாதம் ₹91,418 வரை உங்கள் கணக்கில் கிடைக்கும்.