35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கமல்-பாரதிராஜா

0
234

பாரதிராஜா இயக்கிய ’ஒரு கைதியின் டைரி’ என்ற சூப்பர்ஹிட் கிரைம் திரைப்படம் கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் பாக்கியராஜ் திரைக்கதையில் பாரதிராஜா இயக்கிய இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே வெள்ளி விழா கொண்டாடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்திற்கு பின்னர் கடந்த 35 ஆண்டுகளாக பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்காத நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இன்று நடிகர் கமலஹாசனை பாரதிராஜா தனது மகன் மனோஜ் பாரதியுடன் சென்று சந்தித்ததில் இருந்தே இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பாரதிராஜா மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு திரையுலக மேதைகள் இணைந்து உருவாகும் படம் நிச்சயம் கோலிவுட் திரையுலகில் ஒரு மறக்க முடியாத படமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஇரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!
Next articleதஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here