இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

0
444

இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த சிராஜூநிஷா என்பவரின் தம்பியான முகமது ஜக்ரியா என்பவர், ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜக்ரியா தனது மனைவியை தவிர்த்துவிட்டு, வேறுறொரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, தனது தம்பியை சில நாட்களாக காணவில்லை என்று சிராஜூநிஷாவும், ஜக்ரியாவின் மனைவியும் தனித்தனியாக புலிவலத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமர் என்னும் தலைமைக் காவலர் இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வந்தார்.

புகார் சம்பந்தமாக காவலர் ராமரும், ஜக்ரியாவின் மனைவியும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இந்த பேச்சு இருவருக்கும் இடையே அதிக நெருக்கத்தை உண்டாக்கி கள்ளக்காதல் வரை சென்றுள்ளது. இதை அறிந்துகொண்ட சிராஜூநிஷா இருவரையும் பிடிக்க வேண்டுமென்று எண்ணினார். கடந்த சனிக்கிழமை இரவு ராமுவின் வாகனம் அப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்றதை கவனித்த சிராஜூநிஷா, வேகமாக சென்று வீட்டை பூட்டுபோட்டு பூடினார்.

பின்னர், உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து கதவை திறந்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்தனர். இதன் காரணமாக காவலர் ராமர் ஆயுதப்படைக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணை மயக்கி தன் சுய விருப்பத்திற்கு மாற்றிய போலீசால் காவல்துறைக்கே அசிங்கம் ஏற்பட்டதாக பலர் வேதனையோடு சொல்கிறார்கள்.

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம், மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதுபோல, புகார் அளிக்க வந்த பெண்ணை ராமர் தனக்கு சாதகமாக மாற்றிய சம்பவம் திருச்சி புலிவலம் பகுதி மக்களிடையே முகம் சுழிக்க வைத்துள்ளது.

Previous articleகொரோனோ வைரஸால் உலகப்போர்: ஒரு ஆண்டுக்கு முன்னரே எச்சரித்த பில்கேட்ஸ்
Next article35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கமல்-பாரதிராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here